ஜு.வி யின் “கற்றது கடலளவு” தொடர் ஆசிரியர் கணேசனுக்கு ஒரு கடிதம்.

பட்டிkk, 24.08.2013. அன்புள்ள து.கணேசன் ஸார் அவர்களுக்கு, தங்களின் “கற்றது கடலளவு” புத்தக வாசகர் ……. ……………. மாவட்டத்திலிருந்து எழுதிக் கொள்வது. என்ன சொல்ல? அற்புதம். அருமையான ஒரு புத்தகம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு பயனுள்ள மற்றுமொரு புது வரவாய் அளித்துள்ளீர்கள். அது தாண்டி இத் தொடர் (புத்தகம்) மூலம் ஒரு பரந்துபட்ட தமிழ் வாசகர்களிடையேயும் சென்றடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். பல வருடங்களுக்கு முன் அன்று ஜு.வி.யில் தங்கள் தொடர்வெளிவந்த (மிகச் சரியாகக் குறிப்பிட வேண்டுமென்றால்) 2-வது …